கள்ளத்தொடர்பால் பிறந்த ஆண் குழந்தையை ஒன்றரை லட்சத்துக்கு விற்ற தாய்

பெரம்பூர்: ராயபுரம் பகுதியை சேர்ந்த 45 வயது பெண், குழந்தைகள் நல குழு உறுப்பினராக உள்ளார். இவர் ஆன்லைன் மூலம் புகார் மனுவை செம்பியம் காவல் நிலையத்திற்கு அனுப்பியிருந்தார். அதில் பெரம்பூர் கண்ணபிரான் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த உதயா(29) என்ற பெண் கடந்த டிசம்பர் மாதம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தையை பணத்திற்காக விற்றுள்ளதாகவும், அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவித்திருந்தார். அதன்படி செம்பியம் போலீசார், அந்த பெண்ணிடம்  விசாரித்தனர். அதில் உதயா தனது கணவர் மணிகண்டனுடன் பெரம்பூர் கண்ணபிரான் கோயில் தெருவில் வசித்து வந்தார். இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளான். பின்னர் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்தார். இதற்கிடையில், உதயா திருமணம் செய்து கொள்ளாமல் பாபு என்பவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் குழந்தையை ஆதி என்ற பெண் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு சேலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு விற்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் உதயா, ஆதியிடம் குழந்தை குறித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு

சென்னைக்கு சப்ளை செய்ய வனப்பகுதியில் வெட்டி கடத்திய ரூ.1.60 கோடி செம்மரம் பறிமுதல்: 4 பேர் கைது