கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது

தர்மபுரி, ஜூன் 22: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை தொடர்ந்து, கோட்டப்பட்டி போலீஸ் எஸ்ஐ விஜயன் தலைமையிலான போலீசார், பாலக்கொட்டாய் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள தோட்டத்தில் பதுக்கி வைத்து, கள்ளச்சாராயம் விற்பனை செய்த பாலக்கோட்டை சேர்ந்த சின்னராஜ் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர். இதேபோல், எஸ்எஸ்ஐ அருள்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றபோது, எஸ்.தாதம்பட்டியில் மோகன் (68) என்பவர் வீட்டில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், கோட்டப்பட்டி எஸ்ஐ சரவணன் தலைமையிலான போலீசார், எஸ்.தாதம்பட்டியில் வேடியப்பன் (55) என்பவரது வீட்டில், விற்பனைக்காக வைத்திருந்த, 23 லிட்டர் கள்ளச்சாராயத்ைத பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கள்ளச்சாராயத்தை வாங்கி வந்து, கோட்டப்பட்டியில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு