Monday, July 8, 2024
Home » கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மரத்தில் மோதி விபத்து!: கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் பரிதாப பலி..!!

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மரத்தில் மோதி விபத்து!: கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் பரிதாப பலி..!!

by kannappan

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில் கர்ப்பிணி பெண் உட்பட 3 பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணியான ஜெயலட்சுமி என்பவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக கொண்டு சென்றிருந்தனர். ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்த போது ஆம்புலன்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் ஆம்புலன்சில் இருந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் செல்வி, அம்பிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 
கர்ப்பிணியான ஜெயலட்சுமி, சிகிச்சைக்காக வேறு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்தில் டிரைவர் கலியமூர்த்தி, செவிலியர் மீனா இருவரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார், மூவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் விபத்தால் கர்ப்பிணி பெண் உட்பட 3 உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

two + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi