கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

சிவகாசி: கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் பாரைப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ராமலட்சுமி (32). இவர்களது குழந்தைகள் விஸ்வம் (15), பொன்மணி (13). சிவகாசி அருகே மேலப்பாளையாபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (40). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு குழந்தை இல்லை. ராமலட்சுமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த இரண்டு ஆண்டுளுக்கு மேலாக இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இது இருவரது வீட்டாருக்கு தெரியவரவே கண்டித்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை மேலப்பாளையபுரம் கிராமம் அருகே விஷமருந்தி ராமலட்சுமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். மாரனேரி போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு