கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் தொழிலாளி தீக்குளிப்பு

 

அந்தியூர்,ஜூலை27: அந்தியூரிலுள்ள தவிட்டுப்பாளையம் குருவப்பன் வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(40). இவர் மரங்களை ஏற்றி இருக்கும் கூலித்தொழிலாளி.இவர் மந்தை பகுதியைச் சேர்ந்த, திருமணமாகி கணவரை பிரிந்து 15 வயது மகனுடன் தனியே வசித்துவந்த 40 வயது பெண்ணுடன் கடந்த 15 ஆண்டாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதமாக மாரியப்பனுடன் பேசுவதை தவிர்த்த கள்ளக்காதலி அவரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் பணியாற்றிய அந்த பெண்ணை தேடிச்சென்று மாரியப்பன் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அவர் மறுக்கவே, நேற்றுக் காலை மாரியப்பன் மூடிக்கிடந்த டீக்கடை முன்பு மண்ணெண்யை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்துவிட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை