களக்காடு அருகே ஆடுகள் திருட்டு

களக்காடு, ஜூன் 19: களக்காடு அருகேயுள்ள கீழக்காடுவெட்டி பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (70). இவர் 70க்கும் மேற்பட்ட ஆடுகளை பராமரித்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் 2 ஆடுகளை திருடினர். பின்னர் திருடிய ஆடுகளை பைக்கில் ஏற்றி கடத்தி சென்றனர். இதைப்பார்த்த துரைராஜ் சத்தம் போட்டார். எனினும் மர்ம நபர்கள் ஆடுகளுடன் தப்பி சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு