கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த ஏழை மாணவிக்கு கல்வி உதவி: இன்ஸ்பெக்டர், ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினர்

திருக்கழுக்குன்றம்: கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தவித்து வந்த ஏழை மாணவிக்கு, இன்ஸ்பெக்டர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர், ரூ.20 ஆயிரம் கொடுத்து உதவி செய்தனர். திருக்கழுக்குன்றம் அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். மினி வேன் டிரைவர். இவரது மகள் யுவராணி (21). மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியில் இயங்கும் கற்பக வினாயகா கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 4ம் ஆண்டு படிக்கிறார். இந்நிலையில், யுவராணி கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதையறிந்த, திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், கொத்திமங்லம் ஊராட்சி மன்ற தலைவர் கனகம்மாள் ஆகியோர் சார்பில், கனகம்மாளின் மகன் பிச்சைமுத்து  ஆகியோர் இணைந்து, கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த ஏழை மாணவி யுவராணிக்கு கல்லூரி கட்டண உதவித் தொகையாக  ரூ.20 ஆயிரத்தை வழங்கினர்….

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இல்லை.. பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம்!!

குற்றவியல் சட்டங்கள்: புதுச்சேரியில் ஜூலை 8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூரில் இன்று அதிகாலை மின்மாற்றி வெடித்து பயங்கர தீ விபத்து