கல்வியை 5ஜி மேம்படுத்தும்: பிரதமர் மோடி பெருமிதம்

அடலஜ்: ‘செல்போன்களின் 5ஜி சேவை, கல்வி முறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்’ என பிரதமர் மோடி கூறினார். குஜராத் மாநிலம், காந்தி நகர் மாவட்டம், அடலஜ் நகரில் மாநில அரசின் சிறப்பு பள்ளிகள் திட்ட துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், ‘‘ஒருவரின் ஆங்கில ஞானம் புத்திசாலி என கருதப்படுகிது. ஆனால், உண்மையில் ஆங்கிலம் என்பது தொடர்பு மொழிதான். ஆங்கில மொழியால் சிரமப்படுபவர்களுக்கு உள்ளூர் மொழிகளை பயன்படுத்துவது அவசியம். சமீபத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஜி சேவை ஸ்மார்ட் வகுப்பறைகள், ஸ்மார்ட் பயிற்சிகள், ஸ்மார்ட் வசதிகள் உள்ளிட்டவைகளையும் மிஞ்சி நிற்பவை. இது நமது கல்வி முறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்,’’ என்றார்….

Related posts

தேர்வு எழுதும் மாணவர்களுடனான மோடியின் கலந்துரையாடல் மெய்நிகர் நிகழ்ச்சியாகிறது: நீட் விவகாரத்தால் மாற்றம்

மாநில கட்சிகளை அழிக்கும் பாஜதான் ஒரு ஒட்டுண்ணி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்