Tuesday, July 2, 2024
Home » கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டம்

கல்லூரி விடுதி மாணவர்கள் போராட்டம்

by Dhanush Kumar

திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் கல்லூரி விடுதி மாணவர்கள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு கல்லூரி மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட நலத்துறை கல்லூரி மாணவர் விடுதியில் வழங்கப்படும் உணவு தரம் குறைவாக உள்ளது என்றும், அடிப்படை வசதிகள் முறையாக பராமரிப்பு இல்லை என்றும் விடுதி காப்பாளரையும், சமையலரையும் கண்டித்து கோஷம் எழுப்பினர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் தவசெல்வம் மற்றும் அதிகாாிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

3 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi