கல்லூரி மாணவி தற்கொலை

புழல்: கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து  சோழவரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர்  மாவட்டம் சோழவரம் அடுத்த கும்மனூர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்.  இவரது மகள் சந்தியா(19), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோயம்பேட்டில்  உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று  முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பாட்டாவால்  மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.  வெளியே சென்றிருந்து வீட்டுக்கு வந்த அவரது  பெற்றோர் இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.  உடனே பெற்றோர் சந்தியாவை மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால்,  செல்லும் வழியிலேயே, அவர் பரிதாபமாக  உயிரிழந்தார்.  இது குறித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு  செய்த சோழவரம் போலீசார், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனைக்காக அவரது சடலத்தை  பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். …

Related posts

ரயிலில் குட்கா கடத்திய 13 பேர் கைது

அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு

காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது