கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்

தர்மபுரி, டிச.14: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி சாலம்மாள்(21). இவர்களுக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 11ம் தேதி அதியமான்கோட்டை செட்டியூர் பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சாலம்மாள் சென்றார். அங்கிருந்து தனது வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர், திடீரென மாயமானார். இதுபற்றிய புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பென்னாகரம் எர்ரகொல்லனூரைச் சேர்ந்தவர் குருநாதநாயுடு. இவரது மகள் சுவேதா (19), நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இண்டூர் பூட்டுக்காரன் தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் மணிமேகலை(21), தனியார் கல்லூரியில் பிஇ 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். இதுபற்றி அவரது தாய் பாரதி அளித்த புகாரின் பேரில், இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு