கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது கர்நாடகா மதுபாக்கெட்டுகள் பதுக்கி விற்ற

குடியாத்தம், ஜூலை 6: குடியாத்தம் அடுத்த கொண்டசமுத்திரம் பகுதியில் கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து சில்லறையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவன் அண்ணாமலை(23), அதே பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் சரண்குமார்(23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 81 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி