கல்லூரி பேராசிரியர் வீட்டில் நகை- பணம் திருட்டு

 

மதுரை, ஜூன் 14: மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் அருளப்பன். இவரது மனைவியும் இதே கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள விலிங்ஸ்டன் பங்களாவில், குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 9ம் தேதி கணவன் மனைவி இருவரும், வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர்.

11ம் தேதி இரவு திரும்பிவந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த எட்டரை பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.85 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, தல்லாகுளம் போலீசில் அருளப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பெரியபாளையம் பகுதி கடைகளில் ஆய்வு; கெட்டுப்போன இறைச்சி, பிரியாணி பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை

தொடர் மழை காரணமாக போளிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியது: வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி