கல்லூரியில் கருத்தரங்கம்

தேனி, ஜூலை 23: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் முழுமையான மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வு பற்றிய கருத்தரங்கம் நேற்று நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காசிபிரபு, இணை செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லூரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் கோமதி, சுசிலா சங்கர், சரண்யா வாழ்த்தி பேசினர்.

இதில், கோயம்புத்தூர் சங்கரா வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் பெர்னாடு எட்வர்டு சுவாமிதாஸ் கலந்து கொண்டு முழுமையான மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வு பற்றி விளக்கி பேசினார். முடிவில் முனைவர் மீனாம்பிகை நன்றி கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை