நெல்லை ஜூன் 5: நெல்லை அருகே கல்லிடைக்குறிச்சியில்பைக்கை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகன் (28). கடந்த ஏப். 31ம் தேதி கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி திருமண மண்டம் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குச்சென்ற இவர், பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. பைக்கை மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார், பைக்கை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.