கலைஞர் நூற்றாண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

 

தஞ்சாவூர், செப்.11: தஞ்சை மத்திய மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் 44 அணிகள் பங்கேற்கும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தஞ்சாவூர் மாவட்ட டென்னிஸ் கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் இணைந்து மாநில அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி நேற்று காலை துவங்கியது. இதில் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 38 ஆடவர் அணியினரும், 6 மகளிர் அணியினர் என மொத்தம் 44 அணியினர் பங்கேற்கின்றனர். இதையடுத்து நேற்று காலை 8 மணிக்கு இப்போட்டியை தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார். தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை மத்திய மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன் உள்ளிட்டவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். வெற்றி பெறும் அணிகளுக்கு மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை