கலைஞர் நினைவு தின பேரணி திருவுருவச் சிலைக்கு மாலை

 

மதுரை, ஆக. 8: மதுரையில் நேற்று மாநகர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு அமைதிப் பேரணி மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ தலைமையில் நடந்தது. மேலமாசி வீதி கீழமாசி வீதி சந்திப்பில் துவங்கிய பேரணி, சிம்மக்கல்லில் உள்ள கலைஞர் திருவுருவச் சிலை முன்பு முடிந்தது. பின்னர், கலைஞரின் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ, உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாவட்ட அவைத்தலைவர் ஒச்சுபாலு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்தப் பேரணியில் துணைச் செயலாளர்கள் சின்னம்மாள், ராகவன், மூவேந்திரன், மாவட்ட பொருளாளர் முருகவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராம், தனசெல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகே ஆறுமுகம் முத்து கணேசன், செய்யது அபுதாஹிர், பகுதி செயலாளர் சுதன், அறிவு நிதி, தவமணி, காவேரி, மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சௌந்தரராஜன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் மணிமாறன், துணைத் தலைவர் திராவிடம் மாரி, வட்டச் செயலாளர் காத்தவராயன், ராஜேஷ், மாதவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை