செங்கோட்டை, ஜூன் 18: கலைஞரின் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் ரவிசங்கர் தலைமையில் இலத்தூர் காந்தி காலனி, திருவெற்றியூர், சீவநல்லூர் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட திமுக கொடி கம்பங்களில் கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடியேற்றி 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தனுஷ்குமார் எம்பி வாழ்த்துரை வழங்கினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, தம்பிதுரை, உபயதுல்லா, சந்திரசேகர் ஆகியோர் வரவேற்றனர், சோபனா, சாமி, பாபுகுமார், கருப்பசாமி, ஜெயசீலன், அப்துல்மஜீத், ஆறுமுகம், திருமலையாண்டி, செண்பகநாதன், மாவட்ட பிரதிநிதி சுரேஷ்குமார், அவைத்தலைவர் மாடசாமி, ஒன்றிய பிரதிநிதிகள் கோட்டை ராஜ், சந்திரா, துணைச்செயலாளர் பகவதி, கணேசன், மாரிமுத்து, சங்கரவடிவு, செந்தில்ராஜ், முத்து மாரியப்பன், பாமா, ஒன்றிய துணைச்செயலாளர் வாசுதேவன், செங்கோட்டை நகரச் செயலாளர் வெங்கடேசன், சாம்பவர்வடகரை பேரூர் செயலாளர் முத்து, இளைஞரணி சந்தோஷ், சுரேஷ், சலீம், வைரமணி, ஆறுமுகராஜ், பாலா, மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், அருண்குமார், இசக்கிதுரை, வெங்கடேசன், முத்துக்குமார், இலத்தூர் சுரேஷ், ஆதிதிராவிடர் அணி பரமசிவன், திருவெற்றியூர் ரவி ஆகியோர் பங்கேற்றனர். கிளைச் செயலாளர்கள் முருகேசன், சுகராஜா, மாரியப்பன், மாடசாமி ஆகியோர் நன்றி கூறினர்.