கலைஞரின் நினைவு நாள் அமைதி ஊர்வலம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடக்கிறது திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில்

திருவண்ணாமலை, ஆக்.5: திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் அமைதி ஊர்வலம் வரும் 7ம் தேதி நடக்கிறது. கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வரும் 7ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அமைதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலையில் பஸ் நிலையம் அருகேயுள்ள அறிவொளி பூங்கா அருகில் ெதாடங்கி, அண்ணா நுழைவு வாயில் கலைஞர் சிலை வரை அமைதி ஊர்வலர் நடைபெற உள்ளது. அமைதி ஊர்வலத்திற்கு, பொதுப்பணித்துறை அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு தலைமை தாங்குகிறார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன். மாவட்ட அவைத்தலைவர்கள் த.வேணுகோபால், அ.ராஜேந்திரன், மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்பி சி.என்.அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ரா.தரன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஓ.ஜோதி, மாவட்ட பொருளாளர்கள் எஸ்.பன்னீர்செல்வம், பிரியாவிஜயரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். அதில், திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை, நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் செய்துள்ளார்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்