கலெக்டர் பணியிட மாற்றம் உத்தரவை திரும்ப பெற கோரி முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்

 

காரைக்கால்,பிப்.10: காரைக்கால் மாவட்ட கலெக்டராக பணி செய்த குலோத்துங்கன் இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கலெக்டர் மாற்றம் செய்ததை கண்டித்து அந்த உத்தரவை ரத்து செய்து காரைக்காலுக்கு மீண்டும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காரைக்கால் மக்கள் போராட்டக்குழு சார்பில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நேற்று காரைக்கால் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால் மக்கள் போராட்டக்குழு இனை ஒருங்கிணைப்பாளர் பொன். பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் சூர்யா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’