கலெக்டர் ஆபிஸ் முன் பெண் திடீர் தர்ணா

சேலம், அக்.22: சேலம் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு பெண் ஒருவர் திடீரென நேற்று மாலை தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண் ஓமலூர் அருகே பச்சனம்பட்டி ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த ராஜாவின் மனைவி அமலு(36) என்பது தெரிந்தது. அப்போது அந்த பெண், கணவர், குழந்தைகளுடன் குடியிருந்து வரும் வீட்டை அதே பகுதியை சேர்ந்த தம்பதியினர் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டேன் என்றார். அவரிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்ற போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி