கலெக்டர் அலுவலகத்தில் 16 பேர் தீக்குளிக்க முயற்சி: நாகையில் பரபரப்பு

நாகை: நாகை சாமந்தான்பேட்டையை சேர்ந்த முத்து (38) தனது மனைவியை பிரிந்தார். இதனால், மனைவிக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர். மேலும் அவரது அண்ணன்கள் மற்றும் உறவினர்கள் என 4 பேரின் குடும்பத்தை பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளனர். இதனால், 4 குடும்பத்தை சேர்ந்த 16 பேர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்த போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்தனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி