கிருஷ்ணகிரி, செப்.20: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை சிறப்பு உதவி தாசில்தார் கோகுலகண்ணன் மற்றும் அதிகாரிகள், கந்திகுப்பம் அருகே பழையபுதூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற டிராக்டரை சோதனை செய்தனர். அதில், ஒரு யூனிட் உடை கற்களை பழையபுதூர் பகுதியில் இருந்து ஒரப்பத்திற்கு கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டரை கற்களுடன் பறிமுதல் செய்த அதிகாரிகள், கந்திகுப்பம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டரின் உரிமையாளர், டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.