கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கந்தர்வக்கோட்டை எல்லைக்கு உட்பட்ட வடக்கு தொண்டைமான் ஊரணி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். விவசாயி. இவருக்கு சொந்தமாக மாடு மேய்ச்சலுக்கு சென்றது. இந்நிலையில் வழிதவறி அருகில் உள்ள கிணற்றுக்குள் விழுந்து விட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் மாட்டின் உரிமையாளர் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் விழுந்த மாட்டை உயிருடன் மீட்டனர். பின்னர் மாட்டை, உரியவரிடம் ஒப்படைத்தனர்.