கறம்பக்குடி,அக்.17: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சிபிஐஎம்எல் கட்சி சார்பாக ஒன்றிய அரசை கண்டித்து அம்புக்கோவில் முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐஎம்எல் ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமை வகித்தார். இஸ்ரேல் காசா போர் அமைதி ஏற்பட வேண்டும். பாலஸ்தீன அப்பாவி மக்களையும், காசா குழந்தைகளையும் கொன்று குவிக்கும் இனவெறி படுகொலையை ஏற்படுத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும், ஒன்றிய அரசு பாலஸ்தீன விடுதலைக்கு குரல் கொடுக்க கோரியும், இஸ்ரேலை ஆதரிக்கும் ஒன்றிய மோடி ஆட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.