கறம்பக்குடி அருகே அக்கச்சிபட்டி பள்ளியில் தேசிய ஒற்றுமை தின மாரத்தான் ஓட்டப்பந்தயம்

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்கச்சி பட்டி கிராமத்தில் நடுநிலை பள்ளியில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிக்க பட்டது. இதனை முன்னிட்டு பள்ளியில் மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக கணித ஆசிரியர் மணிமேகலை வரவேற்றார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை