கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

நாமகிரிப்பேட்டை, செப்.29: நாமகிரிப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கி, அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டது.

முன்னதாக சமுதாய வளைகாப்புகளுக்கு வருகைதந்த அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் சுகாதார துறை சார்பில் ரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு, உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு ஏதேனும் பாதிப்பு இருந்தால் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி, கலெக்டர் உமா, முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, தாசில்தார் சரவணன், பிடிஓக்கள் சரவணன், பாலமுருகன், பேரூராட்சி தலைவர் சேரன், துணைத் தலைவர் அன்பழகன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் நெல்லை தனசேகரன், அட்மா குழு தலைவர் ரவீந்திரன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை