கரூர் விளையாட்டு மைதான சாலையில் கூடுதல் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை

 

கரூர், செப். 25: கரூர் மாவட்ட விளையாட்டு மைதானம் செல்லும் சாலையில் கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கருர் தாந்தோணிமலை சாலையில் மாவட்ட விளையாட்டு மைதானம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் தற்போதைய நிலையில் அதிகளவு குடியிருப்புகள் உருவாகியுள்ளன.

இந்த சாலை வழியாக பொன்நகர், பாரதிதாசன் நகர், அருகம்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வோர் இரவு நேரங்களில் செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்த சாலையில் கூடுதல் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏழுந்துள்ளது.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு