Tuesday, July 2, 2024
Home » கரூர் மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்

கரூர் மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்

by MuthuKumar

கரூர், செப். 7: கரூர் மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. நான்கு மண்டலங்களாக பிரித்து பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தாந்தோணிமலை, சணப்பிரட்டி, ராயனூர், இனாம்கரூர், பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் புறநகர்ப்பகுதிகள் அதிகளவு உள்ளன.

வடகிழக்கு பருவமழை துவங்கி தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புறநகர்ப்பகுதிகளில் இன்றைக்கும் மழைநீர் தேங்கி வடியாமல் உள்ளது. இதனால், இந்த பகுதிகளில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி பொதுமக்களை பல்வேறு சிரமத்துக்கு உள்ளாக்கி வருகிறது. மாநகர பகுதிகிளல் தற்போது கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல், மாநகராட்சிக்குட்பட்ட புறநகர்ப்பகுதிகளிலும் கொசு ஒழிப்பு பணிகளான கொசு மருந்து தெளிப்பது, வீடுகள் தோறும் அபேட் மருந்து வழங்குவது போன்ற பணிகளை பணியாளர்கள் மூலம் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த பணிகளை மேலும் தீவிரப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

You may also like

Leave a Comment

8 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi