கரூர்:கரூர் சேலம் பைபாஸ் சாலையில் மண்மங்கலம், செங்காட்டனூர், தளவாபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் உட்கிராமங்கள் பிரியும் இடத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கிராம பகுதிகளை சேர்ந்தவர்களும், நீண்ட தூரம் பைபாஸ் சாலையில் செல்லும் நபர்களும் இந்த நிழற்குடையில் அமர்ந்து ஒய்வெடுத்து செல்கின்றனர்.இந்நிலையில், இந்த நிழற்குடைகள் போதிய பராமரிப்பு குறைவு காரணமாக சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், யாரும் இதனை எளிதில் பயன்படுத்திட முடியாத நிலையில் உள்ளது.எனவே, பைபாஸ் சாலையில் உள்ள இந்த நிழற்குடைகளை புதுப்பித்து, அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர் பார்க்கின்றனர்.