கரூர் அருகே பட்டாக்கத்தியை காட்டி செல்போனை பறிக்க முயன்ற வாலிபர் கைது

 

கரூர்: கரூர் அருகே பட்டாக்கத்தியை காட்டி செல்போனை பறிக்க முயன்றவரை டவுன் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார்(18). இவர், டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த 22ம்தேதி இரவு திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே நடந்து சென்ற போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து, தன்னிடம் பட்டாக்கத்தியை காட்டி செல்போனை பறிக்க முயன்றதாக புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு, கரூர் ராயனூரைச் சேர்ந்த கிருஷ்ணராஜ்(20) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து பட்டாக்கத்தி மற்றும் பைக்கை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது