கரூரில் குறைதீர் கூட்டம்: மக்களிடம் இருந்து பெறப்பட்ட 412 மனுக்களுக்கு நடவடிக்கை: அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

கரூர், ஆக. 22: கரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மக்களிடமிருந்து பெறப்பட் 412 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். கூட்டத்தில், ஒய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு மொத்தம் 412 மனுக்கள் பெறப்பட்டது.

இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 40 மனுக்கள் பெறப்பட்டது.மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மா ற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு நேற்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 அறிவுசார் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் பயிற்சி நு£ல்களும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கிருஷ்ணராயபுரம் வட்டத்தை சேர்ந்த அஞ்சலைதேவி, சாராத ஆகியோர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவிற்கான ஆணைகளையும் கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குநர்கள் வாணி ஈஸ்வரி, சீனிவாசன், தனித்துறை ஆட்சியர் சைபுதீன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அன்புமணி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சிவாய நம சிவாய நம விண்ணை பிளக்க நடராஜர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

தமிழகத்தில் 40 ஆயிரம் காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்

தம்பதியின் உறவினர்கள் 2 பேர் கைது