கருங்கல் அருகே சுருண்டு விழுந்து முதியவர் பலி

கருங்கல், மே 14: கருங்கல் அருகே கீழ ஆப்பிக்கோடு பகுதியை சேர்ந்தவர் மரியதாஸ்(65). விவசாயி. மகன்களுக்கு திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மரியதாஸ் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் அவருக்கு மதுப்பழக்கமும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை மரியதாஸ் வீட்டின் அருகே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மரிய தாஸ் விஷம் அருந்தியிருந்நது தெரியவந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி மரியதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்