கருங்கலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்பு

 

கருங்கல், நவ.20: கருங்கல் அருகே மூசாரி அரசு பள்ளி அருகில் இருந்து ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடங்கி கருங்கல் குறும்பனை திருப்பு, காக்கவிளை வழியாக மிடாலக்காட்டில் நிறைவடைந்தது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு சுமார் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேரில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

ஊர்வலம் செல்லும் பாதையில் பொது போக்குவரத்தை போலீஸார் தடை செய்து மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். தக்கலை: திக்கணங்கோட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. திக்கணங்கோட்டில் தொடங்கிய அணி வகுப்பு ஊர்வலம் பூக்கடையில் நிறைவடைந்தது. மாவட்ட தலைவர் ராஜராம் தலைமை வகித்தார். பின்னர் பூக்கடையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு கேரளா மாநிலத் தலைவர் வன்னிராஜா சிறப்புரையாற்றினார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்