கராத்தே போட்டியில் சாதனை

கீழக்கரை,ஆக.31: அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி ஆக.13ம் தேதி தஞ்சையில் நடந்தது. இதில் கட்டா பிரிவில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பெளசுல் ஹசன் முதல் பரிசு, முஹமது அஃபிக் மோஹித் ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர். குமித்தே பிரிவில் மாணவர் அப்துல் முக்ஷித் முதல் பரிசு, முஹமது பர்ஹான் இரண்டாம் பரிசு, ஹசன் ஃபாரிஸ், அப்துல் ஹமீத் மூன்றாம் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர், முதல்வர் பாராட்டினர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை