கம்பம், மே 10: தேனி மாவட்டம், கம்பம் 110/22 கிவோ துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் நாளை 11ம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையில் கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளுக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.