கருங்கல், அக்.11 ; கப்பியறை பேரூராட்சிக்குட்பட்ட மாங்கோடு அங்கன்வாடி மையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடிஸ் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார். இம் முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் அனிஷ், அரசு மருத்துவர் ஜோயல் பிறின்ஸ், செவிலியர்கள்,டெங்கு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.