Monday, July 1, 2024
Home » கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்: திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி..!!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்: திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி..!!

by kannappan

பெங்களூர்: கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் காலமானார். இது, அனைவரிடத்திலும் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் தான் புனித் ராஜ்குமார். பவர் ஸ்டார் புனித் 29 படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ளார். கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் புனித் ராஜ்குமார். புனித் ராஜ்குமார் 1975ல் சென்னையில் பிறந்தவர். ரசிகர்களால் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல தளங்களில் பணிபுரிந்தவர். பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் இறுதியாக ‘யுவரத்னா’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘ஜேம்ஸ்’, ‘த்வித்வா’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.இதனையடுத்து, இன்று காலை புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.புனித் ராஜ்குமார், தனியார் மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் வெளியானவுடன், அங்கு ரசிகர்கள் குவியத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்துள்ளார். இதனையடுத்து. ஐசியூவில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது அனைவரிடத்திலும் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினர், உறவினர்கள், சக நடிகர்கள் மற்றும்  தயாரிப்பாளர்கள் உட்பட பலர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளதால், மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு, கர்நாடக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் இதனையடுத்து, திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்….

You may also like

Leave a Comment

16 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi