கன்னங்குளத்தில் ரூ.5 லட்சத்தில் இ-சேவை, அங்கன்வாடி மையத்தை சுற்றி அமைக்கப்பட்ட சுவர் திறப்பு

நெல்லை, மார்ச் 9: வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் லெவிஞ்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட கன்னங்குளம் கிராமத்தில் கன்னங்குளம் மகளிர் சுயஉதவி குழு மற்றும் இ-சேவை மையம், அங்கன்வாடி கட்டிடங்களை சுற்றி ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர் திறப்பு விழா, மகளிர் தினத்தையொட்டி நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் கட்டித்தங்கம் மணிவர்ணபெருமாள், சுற்றுச்சுவரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பொன்சி, ரேணுகா, சொர்ண லதா, ஐயப்பன் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி