சென்னை: தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்ய நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார். தமிழ்நாட்டின் பெய்து வரும் கனமழை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேட்டறிந்தார். அப்போது, முதல்வர் மழை நிவாரணப் பணிகள் பற்றியும் பிரதமரிடம் எடுத்துரைத்தார். மாநில பேரிடர் நிதியை கொரோனா நிவாரணப் பணி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு செலவு செய்யப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து பிரதமர் மோடி, தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதாகவும், மீட்பு பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை நல்குவதாகவும் உறுதியளித்தார்….
கனமழை பாதிப்பை சீர்செய்ய நிதி: மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் உறுதி
previous post