கனமழை காரணமாக மரக்கிளை திடீரென உடைந்து வீட்டின் மீது விழுந்து விபத்து: முதியவர் தப்பினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெயா நகரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக மரக்கிளை உடைந்து விழுந்து வீட்டு ஓடு நொறுங்கியதில் அதிர்ஷ்டவசமாக முதியவர் உயிர் தப்பினார். திருவள்ளூர் ஜெயா நகரை சேர்ந்தவர் முருகேசன்(58), நேற்று முன்தினம் இரவு முருகேசன் வீட்டில் தரையில் படுத்துக் கொண்டிருந்தார். மழை பெய்ததால் வீட்டுக்குள் மேலிருந்து ஒழுகியது.  இதனால் முருகேசன் அங்கிருந்து எழுந்து வெளியில் உள்ள சோபாவில் படுத்து உள்ளார். அப்போது வீட்டு அருகில் உள்ள வெல்லாங்காய் மரத்தின் பெரிய மரக்கிளை உடைந்து ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. இதனால் ஓடு நொறுங்கி சேதம் அடைந்தது. இதில் வீட்டு வாசலில் படுத்துக்கொண்டு இருந்த முருகேசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். …

Related posts

ஆன்லைன் ரம்மி விசைத்தறி அதிபர் தற்கொலை

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தேடப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு: கரூரில் சிபிசிஐடி அதிரடி

வேறொருவருடன் நாளை மறுதினம் திருமணம் வீட்டின் சுவர் ஏறி குதித்து காதலனை கரம் பிடித்த பெண்