கந்தர்வகோட்டை பகுதிக்கு இலவச அமரர் ஊர்தி வழங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

கந்தர்வகோட்டை,ஜூன் 12: கந்தர்வகோட்டை பகுதியில் இலவச அமரர் ஊர்தி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகர் சட்டமன்ற தொகுதியின் தலை நகர் ஆகும். இங்கு அரசு தலைமை மருந்துவமனை, புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வீரடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை உள்ளது.

இப்பகுதிகளில் ஏற்படும் சாலை விபத்து, விஷ சந்துகள் தீண்டுதல் போன்றவற்றுக்கு சிகிச்சை பெற இம்மருந்துவமனை வருபவர்கள் மரணம் அடைந்தல், உடற்கூறு ஆய்வு செய்ய புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டிய சூழல் உருவாகிறது.

இவ்வாறு இருக்கும் போது கந்தர்வகோட்டை நகரை மையமாக வைத்து இலவச அமரர் ஊர்தி அரசு வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவசர தேவைக்கு புதுக்கோட்டையில் இருந்து கந்தர்வகோட்டை வரும் வரை பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து உடனடி தீர்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை