கத்தி காட்டி நகை பறித்த வாலிபர் கைது

கோவை மார்ச்.28: கோவை சவுரிபாளையம் ரோடு அம்மன் குளம் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன் (22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அம்மன் குளம் ஏரி மேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த வேதமணி (21) என்பவர் பைக்கில் அங்கே வந்தார்‌. அவர் தரணிதரனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க நகையை பறித்தார். இது தொடர்பாக தரணிதரன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த வேதமணியை கைது செய்தனர் வேதமணி பைக்கில் வந்து நகை பறித்து சென்ற காட்சி அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருந்தது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி