கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற மூவர் கைது

 

ஜெயங்கொண்டம், ஆக.14: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் முகமதியர் தெருவை சேர்ந்த தஸ்தகீர் மகன் தாகீர்உசேன்(42). இவர் உடையார்பாளையம் கடை வீதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று தாகீர் உசேன் கடையில் இருந்தபோது ஜெயங்கொண்டம் சிதம்பரம் ரோட்டை சேர்ந்த பஷீர் மகன் பக்ருதீன்(29), ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை பகுதியை சேர்ந்த கார்த்திக் (23), இடையார் மேலதெருவை சேர்ந்த அருள் மகன் அரவிந்த்(17) ஆகிய 3 பேர் தாகீர்உசேனிடம் ரூ.1000ம் பணம் கேட்டு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின்பேரில் உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்