சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: தேசிய தகுதி தேர்வுக்கான அட்டவணை ஜனவரி 17ம் தேதியே வெளியிடப்பட்டு விட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை கடந்த 3ம் தேதி தான் வெளியானது. தேசிய தகுதி தேர்வு நாளில், ஆசிரியர் தேர்வு வாரியம் கணித பாட தேர்வை அறிவித்தது தான் குழப்பங்களுக்கு காரணம். இரு வகை தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்க வசதியாக கணித பாட தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….