கணவன், மாமியார் வெட்டி கொலை கள்ளக் காதலனுடன் மனைவி கைது..வேடசந்தூர் அருகே பரபரப்பு

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே கணவர், மாமியார் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுடன் கைதானார். இச்சம்பவம் எரியோடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்த எரியோடு அருகே குழுக்களையன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (40). மனைவி சுபஹர்ஷிணி. தாய் சவுந்தரம் (60). இவர்களுக்கு ஊரில் சொந்தமாக தோட்டம் உள்ளது. தோட்டத்தில் மாடுகளும் உள்ளதால் இரவு காவலுக்கு செல்வமும், தாய் சவுந்திரமும் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் இருவரும் தோட்டக்காவலுக்கு சென்றனர். நேற்று காலை 6 மணியளவில் பால் கறப்பதற்காக பால்காரர் வந்தார். அப்போது தோட்ட வீட்டில் செல்வமும், அவரது தாய் சவுந்தரமும் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக செல்வத்தின் மனைவி சுபஹர்ஷிணியிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாயின.செல்வம் விவசாய பணிகளோடு, கோபிகிருஷ்ணன் (28) என்பவருடன் சேர்ந்து பைனான்ஸ் செய்து வந்துள்ளார். அப்போது கோபிகிருஷ்ணனுக்கும், சுபஹர்ஷிணிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலர்களை செல்வமும், அவரது தாய் சவுந்தரமும் கண்டித்துள்ளனர். இதனால் சுபஹர்ஷிணி, கணவர், மாமியாரை கொலை செய்ய கள்ளக்காதலன் கோபிகிருஷ்ணனுடன் திட்டமிட்டார். இதையடுத்து தோட்டக்காவலுக்கு சென்ற கணவர், மாமியாரை வெட்டிக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும், இக்கொலை சம்பவத்திற்கு யாரேனும் உதவினார்களா என்றும் எரியோடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே