கணவன் கொலை; மனைவி கைது

சென்னை: ராயபுரம், சோமுசெட்டி தெரு, 3வது சந்து பகுதியை சேர்ந்தவர் சரவணன் (40). இவரது மனைவி முத்துலட்சுமி (37). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சரவணனுக்கு குடிப்பழக்கம் உள்ளால், அடிக்கடி குடித்துவிட்டு மனையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், மனைவி முத்துலட்சுமிக்கு சொந்த ஊரான தஞ்சாவூரில் உள்ள சொத்தை விற்று பணம் தரும்படி தொல்லை செய்துள்ளார். கடந்த வருடம் தகராறு ஏற்பட்டபோது, மனைவியை அடித்து உதைத்துள்ளார். இந்நிலையில், அந்த சொத்தை விற்பது தொடர்பாக நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, முத்துலட்சுமியை சரவணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த முத்துலட்சுமி, கணவனை தாக்கி கீழே தள்ளி, துணியால் கழுத்தை நெரித்துள்ளார். இதில், சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து ராயபுரம் போலீசார், சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிந்து, முத்துலட்சுமியை கைது செய்தனர்….

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

கலை நிகழ்ச்சி என அழைத்து சென்று பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்: உல்லாசத்துக்காக துபாய் சென்ற தமிழக விஐபிக்கள்

ரூ.12 லட்சம் கொள்ளை பணத்தில் பங்கு பிரிப்பு அடுத்தவர் மனைவியை அபகரித்து இன்ப சுற்றுலா சென்ற கொள்ளையன்