கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம்

தர்மபுரி: தர்மபுரியில் தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க பொதுபேரவை கூட்டம், பெரியார் தெரு சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வி, துணை தலைவர் முனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்வாரிய ஏஐசிசிடியூ திட்ட செயலாளர் சிவராமன், மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார். ஓய்வூதியர் சங்க ராம திலகன், போக்குவரத்து துறை மாதேஷ், கிருஷ்ணன், சின்னச்சாமி, வெற்றி, தாமோதரன், நீலமேகம், பழனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை