கடையை கவனிக்க கூறியதால் தகராறு தலையை சுவற்றில் மோதி மனைவி கொலை: கணவன் கைது

ஆவடி: அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு, ஜே.பி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் முத்து (40). இவர், அம்பத்தூர்- செங்குன்றம் மெயின் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (34). இவர்களுக்கு தீபஸ்ரீ (14) என்ற மகளும், வசந்த் (10) என்ற மகனும் உள்ளனர். தற்கிடையில், முத்து தினமும் மதிய வேளையில் மனைவி விஜயலட்சுமியை கடையில் வியாபாரம் பார்க்க அனுப்பி விடுவார். பின்னர், அவர் வீட்டில் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் மாலை கடைக்கு வருவது வழக்கம். இதே போல, கடந்த 14ந்தேதி விஜயலட்சுமியை கடைக்கு அனுப்பி விட்டு, முத்து வீட்டில் ஓய்வு எடுத்துள்ளார். பின்னர், இரவு மீண்டும் கடையை மூடிவிட்டு முத்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மனைவி விஜயலட்சுமி, தினமும் என்னை மதிய வேளையில் கடைக்கு அனுப்பி விட்டு, நீங்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய், என முத்துவிடம் கேட்டதில், தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முத்து, விஜயலட்சுமியை கன்னத்தில் அடித்து உள்ளார். இதன் பிறகு, மறுநாள் மீண்டும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டபோது, முத்து, மனைவி விஜயலட்சுமியின் தலையை பிடித்து சுவற்றில் மோதி அடித்து உள்ளார். இதில், அவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து போது, விஜயலட்சுமிக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விஜயலட்சுமி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதையடுத்து, புகாரின்படி போலீசார் முத்து மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்….

Related posts

ரயிலில் குட்கா கடத்திய 13 பேர் கைது

அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு

காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது