கடையை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை: சிசிடிவி காட்சிகள் வைரல்

சென்னை: பல்லாவரம் அருகே திரிசூலம், பெரியார் நகர் பிரதான சாலை பகுதியில் சசிகுமார் என்பவர் பால் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் முன்பக்க கதவின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் கல்லாவில் வைத்திருந்த சாவி மூலம் பீரோவை திறந்துள்ளனர்.  அதில் லாக்கரில் வைத்திருந்த ₹5 லட்சம் ரொக்கம் மற்றும் ஒன்றரை சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த பல்லாவரம் போலீசார் விரைந்து வந்து மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வுசெய்தனர்.இதற்கிடையே, 2 மர்ம நபர்கள் சசிகுமாரின் கடையை உடைத்து பணம், நகைகளை கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்…

Related posts

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி

தாயுடன் கள்ளத்தொடர்பு; விவசாயி கொன்று வீச்சு: வாலிபர் கைது